Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 033 (Stephen’s Effective Testimony)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)

20. ஸ்தேவானின் வலிமைமிக்க சாட்சி (அப்போஸ்தலர் 6:8-15)


அப்போஸ்தலர் 6:8-15
8 ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.9 அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானுடனே தர்க்கம்பண்ணினார்கள்.10 அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று.11 அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாக இவன் தூஷண வார்த்தைகளைப் பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாக மனுஷரை ஏற்படுத்தி;12 ஜனங்களையும் மூப்பரையும் வேதபாரகரையும் எழுப்பிவிட்டு; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனைச் சங்கத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்;13 பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனுஷன் இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷணவார்த்தைகளை ஓயாமற்பேசுகிறான்;14 எப்படியென்றால், நசரேயனாகிய அந்த இயேசு இந்த ஸ்தலத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த முறைமைகளை மாற்றுவானென்று இவன் சொல்லக்கேட்டோம் என்றார்கள்.15 ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவன்மேல் கண்ணோக்கமாயிருந்து, அவன் முகம் தேவதூதன் முகம்போலிருக்கக் கண்டார்கள்.

பரிசுத்த ஆவியானவர் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா? இரத்தசாட்சியான ஸ்தேவானின் வாழ்க்கையைப் பற்றி வாசித்துப் பாருங்கள். அப்போது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு தன்னை முழுவதும் ஒப்புக்கொடுக்கிறவனிடத்தில் பரிசுத்த ஆவியானவர் எவ்விதம் செயல்படுகிறார் என்பதை அறிய முடியும்.

ஸ்தேவான் என்பதற்கான கிரேக்கப்பெயரின் (ஸ்டெபனோஸ்) அர்த்தம் கிரீடம் என்பதாகும். மலர்களினால் செய்யப்பட்ட மாலை போன்ற அக்கிரீடம் பண்டிகைக் காலங்கள் ஓட்டப்பந்தயங்கள், விளையாட்டுகள் மற்றும் போர்களில் அடையும் வெற்றியை வெளிப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது. வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வு மற்றும் தேவையை வெளிப்படுத்தும் ஒரு படமாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. பரலோக ஓட்டப்பந்தயத்தில் இரத்தசாட்சிக்கான கிரீடத்தைப் பெறும் முதல் நபராக ஸ்தேவான் இருப்பது, அவனது பெயருடன் ஒத்துப்போகும் சிறப்பான ஓர் அம்சமாக காணப்படுகிறது. அவன் கற்களால் எறியுண்டு கொல்லப்பட்டு, தன்னுடைய ஆண்டவரை பின்பற்றி மகிமையில் பிரவேசித்தான்.

கிரேக்கனாயிருந்த ஸ்தேவான் இரட்சிப்பிற்கான நற்செய்தியைக் கேட்டான், கிறிஸ்துவின் வல்லமை வெளிப்பட தன் இருதயத்தை திறந்து கொடுத்தான், பாவமன்னிப்பை பெற்றுக்கொண்டான். அவன் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்திருந்தான். ஆவியானவரின் அநேக ஆவிக்குரிய வரங்கள் அவனிடமிருந்து வெளிப்பட்டன. ஸ்தேவான் தன்னில் தானே நீதியுள்ளவன் அல்ல, ஆனால் அவன் கிறிஸ்துவின் ஆவியினால் புதுப்பிக்கப்பட்டிருந்தான். அவன் தனது சொந்த தேவபக்தியினால் நீதிமானாக்கப்படவில்லை. கிறிஸ்து தனது விலையேறப்பெற்ற இரத்தத்தால் இலவசமாய் அவனை சுத்தப்படுத்தியிருந்தார். ஒரு பாவியின் வாழ்வில் இறைவன் செய்யும் இச்செயல்கள் “கிருபை” என்ற வார்த்தையில் உள்ளடங்கியுள்ளது. கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பவரைத் தவிர வேறுஎவரும் இறைவனின் கிருபைகளை பெற்றுக் கொள்ளமுடியாது. அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லோரும் கிருபையின் மேல் கிருபை பெற்றோம். (யோவான் 1:16)

இந்த ஆசீர்வாதங்களின் சாராம்சம் இறைவனுடைய வல்லமையாக உள்ளது. சர்வ வல்லமையுள்ளவரின் பெலன் பரிசுத்த ஆவியானவர் மூலமாக விசுவாசியின் அன்பு, தாழ்மை மற்றும் தூய்மையில் காணப்படுகிறது. கிறிஸ்துவின் வல்லமை அவரை பின்பற்றுபவர்களில் செயல்படுகிறது. அவர்கள் பரிசுத்தவான்கள் மத்தியில் தாழ்மையாக வாழும்போது, அவர்களது சுயபெருமை நொறுக்கப்படும்போது அற்புதங்கள் மற்றும் அடையாளங்கள் மூலம் கிறிஸ்துவின் வல்லமை வெளிப்படுகிறது. கிறிஸ்து தனது சாட்சிகள் மூலம் செயல்படுகிறார். அவர்கள் மத்தியில் செயல்பட்டு இரட்சிக்கிறார், குணமாக்குகிறார் மற்றும் ஆசீர்வதிக்கிறார். அவர் பூமியில் நடமாடிய போதும் இதையே செய்தார்.

ஸ்தேவான் தளராமல் உழைக்கின்ற ஓர் பிரசங்கியாளர். அவர் தனது சொந்த விடுதலைக்காக வாழவில்லை. சபையில் நான்கு சுவர்களுக்குள் வசதியாக வாழ்வதில் அவர் திருப்தியடையவில்லை. அவர் மதப்பற்றுமிக்க யூதர்களின் ஜெப ஆலயங்களுக்கு சென்றார். சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்தூர் இயேசுவே மெய்யான மேசியா என்பதையும், அவர் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார் என்பதையும் அவர்களுக்கு சாட்சியாக அறிவித்தார். அப்போஸ்தலர்கள் மட்டுமே கிறிஸ்துவின் ஒரே சாட்சிகளாக திகழவில்லை. மாறாக பரிசுத்த ஆவியினால் நிறைந்துள்ள ஒவ்வொருவரும் இறைவன் அன்புள்ளவர் என்பதை அறிவிக்கிறார்கள். இறைவன் சிலுவையில் மரித்த தனது குமாரன் மூலமாக மனிதர்களை தன்னோடு ஒப்புரவாக்குகிறார். பாவிகளும் மூடர்களும் நிறைந்த இந்த உலகம் இரட்சிக்கப்பட அவர் இவ்விதம் செயல்படுகிறார். ஆனால் உலகமோ, இந்த மாபெரும் சத்தியத்தை அறியவில்லை.

கிரேக்கப் பண்பாட்டுடைய யூதர்களின் ஜெப ஆலயத்துக்கு ஸ்தேவான் வந்தார். சிதறிப்போன யூதர்கள் கிரேக்க மொழியில் பழைய ஏற்பாட்டை நன்கு வாசித்திருந்தார்கள். அதனுடைய அர்த்தங்களை முறையாக அறிந்து தியானித்து இருந்தார்கள். அவர்கள் மற்ற யூதர்களைப் போல வெறுமனே நற்செய்தியை மட்டும் கவனிக்கவில்லை. அதனுடைய கருத்துகளின் வெளிச்சத்தில் தங்கள் மனங்களை பழக்குவித்தார்கள். இருப்பினும் அவர்கள் கீழ்ப்படியாமை மற்றும் அவிசுவாசத்தின் எதிர்மறையான விளைவுகளை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் பழைய ஏற்பாட்டு முறைமையின்படி ஸ்தேவானுடைய நிலை குறித்து தர்க்கம் பண்ணினார்கள். ஆனாலும் தத்துவரீதியாக பயிற்றுவிக்கப்பட்டிருந்த யூதர்கள் ஸ்தேவானிடமிருந்து வெளிப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் ஞானத்திற்கு எதிர்த்து நிற்க முடியவில்லை.

அவர்களது விசுவாசத்தின் கொள்கைகளுக்கு எதிராக ஓர் கலகம் ஏற்படுவதை உணர்ந்தார்கள். அறிவுமிக்க விரிவுரையாளர்கள் கொதித்தெழுந்தார்கள். அவர்கள் இந்த புதிய ஏமாற்றுக்காரருக்கு எதிராக மக்கள், மூப்பர்கள் மற்றும் வேதபாரகர்களை தூண்டி விட்டார்கள். அவர்கள் இவனை உளவு பார்த்தார்கள். இவனை அவமதித்தார்கள். இறுதியில் அவர்கள் ஒரு நேரத்தை குறித்து ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாக அவனை நிறுத்தினார்கள். அதில் மூப்பர்களும், குறிப்பிடத்தக்க சிலரும் இருந்தார்கள்.

பிரதான ஆசாரியர்கள், சட்ட நிபுணர்கள் இவனை சிறைபிடித்ததினால் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். கமாலியேலின் ஆலோசனையின் விளைவாக அமைதி காத்த இவர்கள் தடைசெய்யப்பட்ட இயேசுவின் நாமத்தை உச்சரித்த இந்த பிரதிநிதி மீது கோபத்துடன் பொங்கியெழுந்தார்கள். (அதிகாரம் 5:34-40) அவர்களில் ஒரு சாரார் நியாயப்பிரமாணத்திற்கும், முற்பிதாக்களின் முறைமைகளுக்கும் உண்மையுள்ளவர்களால் இருந்தார்கள். எருசலேமின் ஆதித்திருச்சபை அங்கத்தினர்கள் முழுமையாக யூதர்களாகவும், அதே சமயத்தில் உண்மையுள்ள கிறிஸ்தவர்களாகவும் இருந்தார்கள்.

ஆனால் மதத் தலைவர்கள் ஒரு புதிய ஆவிக்குரிய எழுப்புதல் ஏற்படுவதையும், கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்த கிரேக்க யூதர்கள் யூதமுறைமையிலிருந்து பிரிந்து போவதையும், இந்த நிகழ்வுகள் மூலம் உணர்ந்தார்கள். பன்னிரெண்டு அப்போஸ்தலர்களுக்கும் மரணத்தண்டனை தீர்ப்பை பிரதான ஆசாரியன் வழங்கவில்லை என்பதை இதற்கு முன்பாக கண்டோம். ஏனெனில் அவர்கள் சட்டத்தின்படி சரியாக நடந்துகொண்டார்கள். தங்களின் கருத்தான விண்ணப்பங்களை தேவாலயத்தில் ஏறெடுத்து கனப்படுத்தினார்கள். அப்போஸ்தலர்களின் மீது வைத்த முந்தைய குற்றச்சாட்டுகளை விட, ஸ்தேவானின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு வேறுபட்டதாக இருந்தது. அவன் தேவாலயம் மற்றும் நியாயப்பிரமாணம் இரண்டிற்கும் எதிராக செயல்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டான். வசனப்பகுதிகளை நாம் கவனமாக வாசித்தால் பொய்சாட்சிகளால் ஆலோசனைச் சங்கத்துக்கு முன்பாக கொண்டுவரப்பட்ட இந்த குற்றச்சாட்சியில் ஆறு குறிப்புகள் இருப்பதை காண முடியும். ஸ்தேவானின் பிரசங்கத்தை தவறாக புரிந்து கொண்டதின் அடிப்படையில் அவர்கள் பொய்யாய் குற்றம் சாட்டினார்கள்.

இயேசு சிலுவையில் மனிதர்களுடைய எல்லா பாவங்களையும் மன்னித்தார் என்று ஆலயத்திலே ஸ்தேவான் சொல்லியிருந்தான். எனவே கிரேக்க யூதர்கள் இவ்வாறு தங்கள் வாதத்தை முன் வைத்தார்கள். “ஆகவே உனக்கு தேவாலயம் தேவையில்லை. அதிலே தினமும் செலுத்தப்படும் பலிகள் தேவையில்லை. நீ தேவாலயம் மற்றும் பலி தொடர்புடைய நாட்டின் அனைத்து உயர்ந்த சடங்குகளையும் மறுதலிக்கிறாய்”.

மனிதனின் இரட்சிப்பு என்பது இயேசுவின் மீது வைக்கும் விசுவாசத்தை மட்டும் சார்ந்துள்ளது என்று ஸ்தேவான் யூதர்களுக்கு சொல்லியிருந்தார். எனவே பண்டிதர்கள் உடனடியாக அவனுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து, அவனை குற்றம் சாட்டினார்கள். “நியாயப்பிரமாணம் என்பது இறைவனுடைய நியாயப்பிரமாணம் என்பதை நீ நம்பவில்லை” என்று கூறினார்கள். அதன் கட்டளைகளை கைக்கொள்வதின் மூலமும் உயர்ந்த நன்னடைக்கையின் மூலமும் ஒரு மனிதன் நீதிமானாக்கப்படுகிறான். நியாயப்பிரமாணம் நல்லது, பரிசுத்தமானது. ஆனால் மனிதனுடைய இருதயம் தீமையானது. அதை முழுமையாக கைக்கொள்ள மனிதன் இயலாதவனாக இருக்கிறான் என்பதை ஸ்தேவான் அவர்களுக்கு தெளிவாக விளக்கியிருந்தான் இறைவனின் நியாயப்பிரமாணம் நம்மை ஆக்கினைக்குட்படுத்துகிறது. நம்மை அழிக்கின்றது. அது நம்மை ஒரு போதும் இரட்சிப்பதில்லை.

இதைத் தொடர்ந்து யூதர்கள் எரிச்சலுற்று கோபத்துடன் அவனிடம் கேட்டார்கள். “இறைவனுடைய இந்த உடன்படிக்கையை நமக்கு வழங்கியது மோசே அல்லவா? அவர், பரிசுத்தமானவருக்கும் நமக்கும் இடையில் இருக்கும் தனித்துவம் வாய்ந்த மத்தியஸ்தர் அல்லவா? ஸ்தேவான் அவர்களுக்கு இவ்விதமாக பதிலளித்தான். மரணத்தை வென்று எழுந்த ஒரே மனிதன் இயேசுகிறிஸ்து மட்டுமே. அவர் இறைவனுடன் வாழ்கிறார். நமக்காக பரிந்து பேசுகிறார். அவர் கிறிஸ்து மட்டுமே, மோசே அல்ல. நம்மை படைத்தவருடன் ஒப்புரவாக்குபவர் கிறிஸ்து மட்டுமே.

யூதர்கள் ஸ்தேவானிடம் தந்திரமாய் ஒரு கேள்வி கேட்டார்கள். “புறக்கணிக்கப்பட்ட, சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிருள்ள ஆண்டவராக இறைவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். தாவீதின் தீர்க்கதரிசனத்தின்படி அவரே கிறிஸ்து (மேசியா) என்பதை (சங்கீதம் 110) நீ கூறுகிறாயா? ஸ்தேவான் முழுமையாக இயேசுவின் தெய்வீகத்தை ஏற்றுக்கொண்டான். எனவே இறை நிந்தனை செய்ததாக அவன் மீது அவர்கள் குற்றம் சுமத்தினார்கள்.

இறைவனை பிரியப்படுத்துவதற்காக நியாயப்பிரமாணத்தின் அனைத்து கட்டளைகளையும் உறுதியாக கைக்கொள்ளும்படி யூத சட்ட நிபுணர்களிடம் பரிசேயர்கள் வலியுறுத்தியிருந்தார்கள். ஆனால் இறைவனின் நியாயப்பிரமாணம் என்பது இறைவனுடைய அன்பை உள்ளடக்கியது. இந்த அற்புதமான அன்பு நம்மை எல்லா தடைகளிலிருந்தும் விடுவிக்கிறது. சுதந்திரமாய் நாம் இறைவனுக்கு சேவை செய்திட நம்மை பலப்படுத்துகிறது என்பதை ஸ்தேவான் அவர்களுக்கு உறுதிப்படுத்தினான்.

யூதர்களின் இருதயம் மிகவும் கடினப்பட்டது. பரிசுத்த ஆவியானவரின் தெளிவான சத்தத்திற்கு அவர்கள் எதிர்த்து நின்றார்கள். இறுதியாக ஸ்தேவான் அவர்களிடம் கிறிஸ்து சீக்கிரமாய் வருகிறார் என்று சொன்னான். அவர் வரும் முன்பாக இறைவனுடைய கோபம் எருசலேம் விழும். பழைய உடன்படிக்கையின் மக்கள் மனந்திரும்பவில்லையென்றாலும், அவர்கள் உலக இரட்சகரிடம் தவறை உணர்ந்து மனந்திரும்பவில்லை யென்றாலும் இறைவன் தேவாலயத்தை அழிப்பார் என்று கூறினான்.

பொய் சாட்சிகள் இந்த குற்றச்சாட்டை ஸ்தேவானுக்கு எதிராக உறுதிப்படுத்திய போது, தேசத்தின் தலைவர்கள் அவர்களை உற்றுப் பார்த்தார்கள். அவர்கள் மத்தியில் நின்று கொண்டிருந்த அந்த ஒப்பற்ற மனிதனை கோபத்துடன் பார்த்தார்கள். அந்த மனிதன் பரலோகத்தின் ஒளியை அவனுடைய முகத்தில் பெற்றிருந்தான். பரிசுத்த ஆவியினால் நிறைந்திருந்தான்.

விண்ணப்பம்: ஓ! பரிசுத்தமான இறைவனே, மனித சடங்குமுறைகள், நியாயத்தீர்ப்புகள் இவைகளில் இருந்து எங்களை விடுவிக்கும்படி நீர் உமது குமாரனை அனுப்பினதற்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம். பழைய விசுவாசத்தின் எஞ்சிய அனைத்திலுமிருந்து எங்களை முழுமையாக விடுதலை பெற எங்களுக்கு உதவும். நாங்கள் உம்மை மேற்போக்காக பின்பற்றவில்லை. மாறாக நீர் எங்களை விசுவாசத்தின் முழுமை மற்றும் ஆசீர்வாதத்திற்கு நேராக நடக்கின்றோம்.

கேள்வி:

  1. ஏன் ஸ்தேவான் மீது மட்டும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது? ஏன் பன்னிரெண்டு சீஷர்கள் அதில் இணைக்கப்படவில்லை?

லூக்காவிற்கு நன்றி கூறுவோம். ஏனெனில் அவருடைய புத்தகத்தில் ஏழாம் அதிகாரத்தில், ஆதி திருச்சபை எவ்விதம் பழைய ஏற்பாட்டை புரிந்து வைத்திருந்தது என்பதற்கான போதுமான விபரங்களை தொகுத்து எழுதியுள்ளார். தங்கள் முற்பிதாக்களுடன் இருந்த உறவை அவர்கள் விட்டுவிடவில்லை. இயேசு கிறிஸ்துவின் வருகையையும் இறைவனின் மீட்பின் திட்டத்தின் வளர்ச்சியையும் வெளிப்படுத்தக்கூடிய வசனங்களில் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலோடு தெளிவான அடையாளங்களை நியாயப்பிரமாணம், சங்கீதங்கள் மற்றும் தீர்க்கதரிசனங்களில் கண்டார்கள். ஆதி திருச்சபையின் காலத்தில் இருந்த நியாயப்பிரமாணத்தின் முக்கியமான உண்மைகளின் ஆழங்களை புரிந்துகொள்வதற்கு பின்வரும் விபரங்களின் தொகுப்பு உதவி செய்கிறது. நாம் இவ்விதமாக சொல்லலாம். பழைய ஏற்பாட்டில் நமது விசுவாசத்தின் அஸ்திபாரத்திற்கான பாடத்தை ஸ்தேவான் நமக்கு கொடுக்கிறான்

www.Waters-of-Life.net

Page last modified on July 02, 2013, at 09:33 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)