Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 124 (Jesus appears to the disciples with Thomas)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - ஒளி இருளை மேற்கொள்ளுகிறது (யோவான் 18:1 – 21:25)
ஆ - கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மற்றும் தரிசனமாகுதல் (யோவான் 20:1 - 21:25)

3. இயேசு தோமாவுடன் இருந்த சீஷர்களுக்கு காட்சியளிக்கிறார் (யோவான் 20:24-29)


யோவான் 20:29
29 அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.

தோமா இயேசுவின் காயங்களை தொட்டுப் பார்த்தானா இல்லையா? என்பது நமக்குத் தெரியாது. அவரது தழும்புகளை கண்டவுடனே அவன் நம்பியிருக்கக் கூடும். அவனது அவநம்பிக்கையினிமித்தம் அவன் வெட்கப்பட்டிருப்பான். அவன் தைரியத்தை இழந்ததற்காக வருந்தியிருப்பான். கண்ணால் கண்ட சாட்சியின் அடிப்படையில் இயேசு தோமாவின் விசுவாசத்தை கோட்பாடு சார்ந்த விசுவாசம் என்று அழைத்தார். ஆனால் அதைவிட மேலான நிலை விசுவாசத்தை உருவாக்க அவர் விரும்புகிறார். அவரைக் காணாமல் அவரது வார்த்தையில் நம்பிக்கை வைப்பது தான் அந்த மேலான விசுவாசம், கனவுகள், தரிசனங்கள் மற்றும் காட்சி தருதலை விரும்புகிறவன், அதன் மூலம் தனது விசுவாசத்தை உறுதிப்படுத்த முயல்பவன் ஆரம்ப நிலையில் உள்ளவனாக இருக்கிறான். அவர் முதிர்ச்சியடைந்தவன் அல்ல, அவன் விசுவாசத்தில் உறுதிப்பட்டவன் அல்ல, இருப்பினும் நெருக்கமான சூழ்நிலைகள் மத்தியில் இருந்த தமது அப்போஸ்தலர்களை விசுவாசத்தில் பெலப்படுத்த அவர் பலமுறை அவர்கள் முன் தோன்றினார்.

அவரைக் காணாமல் விசுவாசிப்பவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் இயேசுவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், மகிழ்ச்சியை கண்டடைந்தவர்கள். உண்மையான விசுவாசம் மிகப் பெரிய இயக்கு விசையை நமக்குள் உருவாக்குகிறது.தரிசனங்கள் கொடுக்கும் விசுவாசம் நிறையற்றதாக இருக்கும். இறைவனின் வார்த்தையில் மனிதன் வைக்கும் நம்பிக்கை அதரிசனமான செய்தியாளரை கனப்படுத்துகின்றது.

நற்செய்தியாளர்களும், அப்போஸ்தலர்களும், நற்செய்திகளில், நிரூபங்களில் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை எடுத்துப் பேசியுள்ளார்கள். இயேசுவின் உயிர்த்தெழுதல் ஒரு புதிய யுகத்திற்கான வெற்றி முழக்கம் ஆகும். விசுவாசிகளின் இருதயங்களில் இறைவனின் ஜீவன் ஆளுகை செய்கிறது. நமது விசுவாசம் என்பது வெறும் நம்பிக்கையோ அல்லது எண்ணமோ மட்டுமல்ல, அது ஜீவனாய் இருக்கிறது. உயிர்த்தெழுந்த கிறிஸ்துவிடம் இணையச் செய்கிறது. இதுவே நம்முடைய நாட்களில் மிகப் பெரிய அற்புதமாக உள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் இயேசுவைக் காணாமல் விசுவாசிக்கிறார்கள். விசுவாசத்தின் மூலமாக நித்திய ஜீவனின் வல்லமையை அவர்கள் அனுபவித்து இருக்கிறார்கள். அநேக கிறிஸ்தவர்கள் தங்களது உடைமைகளை, உறவினர்களை, தங்களது ஜீவனை இதனிமித்தம் இழந்துள்ளார்கள். அவர்கள் கிறிஸ்துவின் வார்த்தைகளில் விசுவாசம் வைப்பதின் மூலம் சத்தியத்தை பெற்றுள்ளார்கள். விசுவாசம் என்பது அறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக உள்ளது. இயேசு அப்படிப்பட்ட விசுவாசத்தை தன்னுடைய வார்த்தையின் மூலம் கனப்படுத்துகிறார். விசுவாசிக்குள் தனது ஜீவனை கொண்டு வருகிறார். நமது விசுவாசம் நம்மை முழுவதும் ஆட்கொள்கிறது. நமது இரட்சகர் இயேசுவிடம் நம்மை இணைக்கிறது.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் எங்களது விசுவாசத்தை துவக்குகிறவர், முடிக்கிறவராயிருக்கிறீர். நீர் எங்களை நேசிக்கிறீர். உமது வார்த்தையின் மூலம் உமது சத்தியம் எங்களை வந்தடைகிறது. நீர் என்னை இரட்சிப்பீர் என்பதை இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன். என் நண்பர்களையும் நீர் இரட்சிப்பீர். நீர் உமது நாமத்தினாலே ஜீவனுள்ள நம்பிக்கையில் அவர்களை உயிர்ப்பிப்பீர், நிலைநிறுத்துவீர். அவர்கள் நித்திய வாழ்வையும், பெரிய மகிழ்ச்சியையும் பெறுவார்கள்.

கேள்வி:

  1. தம்மைக் காணாதிருந்தும் விசுவாசிப்பவர்களை பாக்கியவான்கள் என்று இயேசு ஏன் அழைத்தார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 10:37 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)