Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 095 (The world hates Christ)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - அப்போஸ்தலர்கள் நடுவில் வெளிச்சம் ஒளிர்கிறது (யோவான் 11:55 - 17:26)
ஈ - எருசலேமிற்குச் செல்லும் வழியில் பிரியாவிடை (யோவான் 15:1 - 16:33)

3. உலகம் கிறிஸ்துவையும் அவரது சீஷர்களையும் வெறுக்கிறது (யோவான் 15:18 – 16:3)


யோவான் 16:1-3
1 நீங்கள் இடறலடையாதபடிக்கு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். 2 அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங்காலம் வரும். 3 அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள்.

தம்முடைய சீஷர்கள் மூன்று காரணங்களுக்காக வெறுக்கப்படுவார்கள் என்று இயேசு அவர்களுக்கு அறிவித்தார்:

அவர்கள் உலகத்தினால் பிறக்காமல் இறைவனால் பிறந்த காரணத்தினால்.

கிறிஸ்து இறைவனுடைய மகன் என்றோ அவருடைய சாயல் என்றோ மனிதர்கள் உணர்ந்துகொள்ளாத காரணத்தினால்.

அந்த மதவெறியர்கள் உண்மையான இறைவனை அறியாமல், தாங்கள் அறியாத அந்தகாரத்தின் தெய்வத்தை அவர்கள் வணங்குவதால்.

நரகத்தின் வெறுப்பு தொடருகிறது என்பதில் சந்தேகம் இல்லை. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய இறைவனிடத்தில் திரும்புகிற எவரையும் அவர்கள் எங்கிருந்தாலும் மதவெறியர்களால் கொல்லப்படுகிறார்கள். அந்த மதவெறியர்கள் அவர்களைக் கொல்லும்போது தாங்கள் இறைவனுக்குச் சேவை செய்வதாக நினைப்பார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் பிசாசுக்குத்தான் ஊழியம் செய்கிறார்கள். உண்மையான இறைவன் பரிசுத்த பிதா என்பதை அவர்கள் அறியார்கள். அவர்கள் கிறிஸ்துவின் இரத்தத்தின் வல்லமையை அனுபவிக்கவில்லை. அவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில்லை. ஆகவே, பரிசுத்த திரித்துவத்தை பிரதிபலிப்பவர்களை உபத்திரவப்படுத்தி, கொலைசெய்து, பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி அழிக்கும்படி, ஒரு அந்திய ஆவி அவர்களை வழிநடத்துகிறது. யூதர்கள் அப்படித்தான் செய்தார்கள், கிறிஸ்து மீண்டும்வரும்வரை இவ்விதமாக நடைபெறும்.

மனிதர்களுடைய அறிவு பெருத்துப்போவதால் எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும் என்று கற்பனை செய்யாதீர்கள். பரத்திலிருந்து வரும் ஆவி மற்றும் பாதாளத்திலிருந்து வரும் ஆவி ஆகிய இந்த இரண்டு ஆவிகளும் இந்த உலகத்தின் முடிவுவரை ஒன்றை ஒன்று எதிர்த்துப் போராடிக்கொண்டே இருக்கும். பரலோகத்திற்கும் நகரத்திற்கும் இடையில் எந்தப் பாலமும் கிடையாது. ஒன்று நீங்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் ஐக்கியத்திற்குள் நுழைவீர்கள். அல்லது நரகத்தின் கட்டுக்குள்ளும் அக்கிரமத்தின் சிறைக்குள்ளும் விழந்துபோவீர்கள். நீங்கள் இயேசுவைப் பின்பற்றுவீர்களானால், உங்களுடைய சாட்சியினாலே பிதாவை மகிமைப்படுத்தும்படி, அன்புள்ள நபராக மாறிவிடுவீர்கள். மாறாக, நீங்கள் அவருடைய பிள்ளையாகவில்லை என்றால், மற்ற ஆவிகளுடனும் சிந்தனைகளுடனும் கட்டப்பட்டவர்களாகவே நிலைத்திருந்து, இறைவனுடைய எதிரியாக மாறிவிடுவீர்கள்.

நீங்கள் அவரில் உண்மையாக நிலைத்திருந்தால், உங்களுக்கு அவர் அருளும் புத்திர சுவிகாரத்தின் விலை என்ன என்பதை இயேசு உங்களுக்கு நினைப்பூட்டுகிறார். நரகம் கிறிஸ்துவுக்கும் அவரைப் பின்பற்றுவோருக்கும் எதிராக தனது செயல்களை நடப்பிக்கும்போது உங்கள் எதிர்காலம் கடினமானதாகவும் வலியுள்ளதாகவுமே இருக்கும். இயேசுவை உண்மையாகப் பின்பற்றுவோர் அனைவரையும் உலகம் எதிர்க்கிறது. ஆகவே, ஒன்று நீங்கள் பிதாவை இறைவனாகப் பெற்று இவ்வுலகத்தில் அந்நியராக வாழ வேண்டும். அல்லது இறைவனுக்கு எதிரியாகி இவ்வுலகத்தின் வரவேற்பைப் பெற வேண்டும். எனவே, வாழ்வா நித்திய மரணமா எதைத் தெரிவுசெய்யப்போகிறீர்கள்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே நீர் மரணத்தை தெரிந்துகொண்டு, பிதாவுக்கு உண்மையுள்ளவராயிருந்தபடியால் உமக்கு நன்றி. நாங்கள் இறைவனுடைய பிள்ளைகளாக நிலைத்திருக்கும்படி, இவ்வுலகத்தின் ஆவியிலிருந்து பிரித்தெடுத்து, உமது அன்பில் எங்களை நாட்டியருளும். உம்முடைய அன்பே எங்கள் வல்லமையாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறது.

கேள்வி:

  1. கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களை உலகம் ஏன் வெறுக்கிறது?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 09:39 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)