Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 037 (Christ raises the dead and judges the world)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
அ - இரண்டாம் எருசலேம் பயணம் (யோவான் 5:1-47) -- கருப்பொருள்: இயேசுவுக்கும் யூதர்களுக்குமிடையில் பகைமை ஏற்படுதல்

3. கிறிஸ்து மரித்தோரை உயிர்ப்பித்து உலகத்தை நியாயம்தீர்க்கிறார் (யோவான் 5:20-30)


யோவான் 5:25-26
25 மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 26 ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் செய்திருக்கிறார்.

மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்வதன் மூலமாக தானே சத்தியமானவர் என்று இயேசு தெளிவுபடுத்துகிறார். பழைய ஏற்பாட்டு மக்கள் கற்பனை செய்ததைவிட சிறப்பான முறையில் அவரைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் அவரில் நிறைவேறுகின்றன. அனைவரும் பாவத்திலும் கேட்டிலும் மரித்துப் போயிருக்கிறார்கள், ஆனால் பாவத்தைத் தன்னுடைய சரீரத்தினால் மேற்கொண்டு, விசுவாசத்தின் மூலமாக அவருடைய வாழ்வில் நமக்குப் பங்கு தந்த மனுவுருவில் வந்த இறைமைந்தனாகிய பரிசுத்தர் அவர் ஒருவரே. இன்று யார் இந்த இரட்சிப்பின் நற்செய்திக்குச் செவிகொடுத்து, அதைப் புரிந்துகொண்டு, கிறிஸ்துவோடு ஒட்டிக்கொள்கிறானோ அவன் இறைவனுடைய வாழ்வைப் பெற்றுக்கொள்கிறான். உயிர்த்தெழுதலின் நாளிலிருந்து நம்முடைய விசுவாசம் உயிருள்ள விசுவாசம் என்று நாம் அறிந்தி ருக்கிறோம், அது மரணத்திற்கும் அழிவிற்குமுரிய மதமல்ல. அவருக்குச் செவிகொடுப்பவர்களுக்கும், அவருடைய செய்தியை இன்னும் புரிந்துகொள்ளாவிட்டாலும் ஆவலோடு இருப்பவர் களுக்கும் அவர் தம்முடைய ஜீவனின் ஆவியைக் கொடுக்கிறார். அவர்களில் உண்மையான செவிகொடுத்தலை உருவாக்குகிறார், இதில் பாவத்தில் மரித்திருக்கிறவர்கள் அவருடைய சத்தத்தைக் கேட்பார்கள் என்ற ஆச்சரியமான கூற்று உண்மையாகிறது. மரித்தவர்கள் தாங்களாக எழுந்திருக்கவோ, செவிகொடுக்கவோ முடியாது, இயேசு அவர்களுக்கு ஜீவனைக் கொடுக்கிறார், அவர்கள் செவிகொடுக்கிறார்கள்.

நம்முடைய உலக வாழ்க்கை அழிந்துவிடும், ஆனால் நமக்குக் கொடுக்கப்பட்ட நித்திய வாழ்வோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். இயேசு சொன்னதைப் போல, நானே உயிர்த் தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக் கிறவன் மரியாமலும் இருப்பான்.

நித்திய வாழ்வின் முழுமையையும் பிதா கிறிஸ்துவுக்குக் கொடுத் திருப்பதால் அவர் நம்மை உயிர்ப்பிக்க முடியும். கிறிஸ்து ஜீவ தண்ணீர் ஓயாமல் சுரந்துவரும் மாபெரும் நீரூற்றைப்போல கிறிஸ்து இருக்கிறார். வெளிச்சத்தின் மேல் வெளிச்சத்தையும், அன்பின் மேல் அன்பையும், சத்தியத்தின் மேல் சத்தியத்தையும் அவரிடமிருந்து நாம் பெற்றுக்கொள்கிறோம். அவரிடமிருந்து எந்த கெட்ட காரியமோ, இருளோ, தீமையான சிந்தனையோ புறப்பட்டு வருவதில்லை. பவுல் சொன்னதைப்போல அவர் முழுவதும் அன்பினால் நிறைந்தவராயிருக்கிறார்: கிறிஸ்து இரக்கமுள்ளவர்; பொறாமையோ பெருமையோ இல்லாத நண்பன்; அவர் தனக்குரியவைகளை நாடுவதில்லை; அவர் மற்றவர்களுக்குத் தீங்கு நினைக்காமலும் அநியாயத்தில் சந்தோஷப் படாமலும் இருக்கிறார். அவர் எல்லாவற்றையும் சகிக்கிறார், எல்லாருடனும் பொறுமையாக இருக்கிறார்; அவருடைய அன்பு ஒருபோதும் ஒழியாது. இதை அவருடைய ஆவியின் மூலம் நமக்கு அருளியிருக்கிறார். நாமும் ஜீவ ஊற்றாக மாறுவோமாக.

யோவான் 5:27-29
27 அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார். 28 இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்; 29 அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.

சுபாவ மனிதன் பாவத்தினால் மரித்திருக்கிறான். இறைவனுடைய அன்புக்குச் செவிகொடுக்காதவன் எவனோ அவன் தன்னைத் தானே நியாயம் தீர்த்துக்கொள்கிறான். அவருக்குச் செவி கொடுத்து அவரை ஏற்றுக்கொள்பவர்கள் வாழ்கிறார்கள். அதே வேளையில் அவருடைய வார்த்தைகளும் நடத்தைகளும் நம் முடைய வாழ்வுக்கான விதிமுறைகளாயிருக்கிறது. இறைவன் நியாயத் தீர்ப்பை அவரிடம் கொடுத்திருக்கிறார்; நம்மைப் போல சோதிக்கப்பட்டும் பாவமில்லாதிருக்கிற பரிசுத்தர் அவரே. தெய் வீக சமூகத்திற்கு முன்பாக யாரும் சாக்குப்போக்குச் சொல்ல முடியாது. சர்வ லோகத்ததையும் நியாயம் தீர்ப்பதற்கு தகுதி யானவர் கிறிஸ்து மட்டுமே, அவரே முழு மனுக்குலத்தின் முடிவையும் தீர்மானிப்பார். தேவதூதர்களும் அனைத்துப் படைப்புகளும் அவரை வணங்கும்.

இயேசுவின் கட்டளைப்படி உயிர்த்தெழுதல் நிச்சயமாக நடை பெறும். அவருடைய அழைப்பு நம்முடைய உலகமுழுவதையும் ஊடுருவிச் செல்லும், மரித்தவர்கள் சாதாரண சத்தத்தைக் கேட்ப தில்லை, ஆனால் குமாரனுடைய சத்தம் அவர்களை நடுங்கச் செய்யும். நித்திரையடைந்திருக்கும் ஆத்துமாக்கள் தங்கள் கல்ல றைகளைவிட்டு எழுந்திருப்பார்கள். சில ஆத்துமாக்கள் உயி ருள்ளவைகளாக எழுந்திருக்கும், ஆனால் சிலதோ மரித்த வர்களைப் போலவே எழுந்திருக்கும், இது ஆச்சரியத்தில் ஆச்சரியம். அவை இரண்டு வகையான உயிர்த்தெழுதல், ஒன்று ஜீவனுக்கேதுவானது, மற்றது நியாயத்தீர்ப்புக்கு ஏதுவானது. அந்த தருணம் ஆச்சரியம் நிறைந்ததாக இருக்கும், நாம் பிரகாசமான ஒளி என்று நினைத்தவர்கள் இருளினால் மூடப்படுவார்கள். நாம் எளிமையானவர்களும் பயனற்றவர்களும் என்று நினைத்தவர்கள் சூரியனைப் போல பிரகாசிப்பார்கள்!

இறைவனுக்கு முன்பாக உயிருடன் இருக்கும் நல்லவர்கள் கெட்டவர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் அல்ல. ஆனால் முதலாவது கூட்டம் இயேசு கிறிஸ்துவினால் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அதற்கு நன்றியுடன் வாழ்ந்தவர்கள். அவருடைய நற்செய்தியின் வல்லமையினால்தான் அவர்கள் வாழ்ந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர் உண்டு பண்ணும் கனிகள்தான் காணப்பட்டது. இயேசு தன்னுடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் அவர்களுடைய கறைகளை எல்லாம் கழுவி சுத்திகரித்துள்ளார். இந்தக் கிருபையை அவர்கள் விசுவாசத்தினால் பெற்றார்கள்.

தங்களுடைய சொந்த செயல்கள் இறைவனுக்கு முன்பாகப் போதும் என்று நினைத்தவர்கள் கீழ்க்காணும் நியாயத்தீர்ப்பைப் பெறுவார்கள். சுயநலமுள்ளவர்களே நீங்கள் உங்கள் சொந்த விடுதலையைக் குறித்து மட்டுமே கருத்துள்ளவராயிருந்தீர்கள், நீங்கள் உங்கள் எதிரிகளை நேசிக்கவில்லை? உங்களுக்கும் இறைவனுக்கும் இடையில் சிலுவையின் மூலமாக முழுமையான ஒப்புறவாக்குதலை கிறிஸ்து ஏற்படுத்தியிருக்க நீங்கள் அதை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? அவர் அருளும் நித்திய வாழ்வை எப்படிப் புறக்கணித்தீர்கள். உங்களுடைய பெருமையினால் உங்களுக்கு அருளப்பட்ட கிருபையைப் புறக்கணித்து மரணத் தைத் தெரிந்துகொண்டீர்கள். பாவத்தில் மரித்திருப்பவர் கள் எழுந்திருந்து கடுமையான தண்டனையைப் பெற்றுக் கொள்வார் கள், அவர்களுடைய வார்த்தைகள், செயல்கள், சிந்தனைகள் அனைத்தையும் குறித்து விரிவாகக் கணக்குக் கொடுப்பார்கள். ஆனால் விசுவாசத்தினால் கிறிஸ்துவின் மகிமையை நோக்கி இழுக்கப்பட்டவர்களுக்குள் கிறிஸ்து விடமிருந்து அன்பு பொழியப்படும். அதனால் அவர்கள் நித்திய வாழ்வின் இன்றைய தன்மையாகிய இரக்கமுள்ள சேவை செய்திருப்பார்கள்.

யோவான் 5:30
30 நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.

எல்லாவற்றையும் விட பெரிய பணியைக் கிறிஸ்து நிறை வேற்றுகிறார்; அவரே நித்திய நியாயாதிபதி. கிறிஸ்து தனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை அறிந்திருந்தும் தாழ்மையுள்ளவ ராக, நான் சுயமாக ஒன்றும் செய்வதில்லை என்று கூறுகிறார். அதாவது நானாக நியாயம் தீர்ப்பதோ, சிந்திப்பதோ, அன்பு செய்வதோ, சுவாசிப்தோ இல்லை என்கிறார். ஆகவே அவர் அனைத்து கனத்தையும் பிதாவுக்குக் கொடுத்தார்.

பல நேரங்களில் இயேசு பிதாவோடு இணைக்கப்பட்டிருந்தார். இவர்களுக்கிடையிலான இந்த தொலைபேசித் தொடர்பு ஒருபோதும் தடைசெய்யப்படுவதில்லை, ஏனெனில் மனிதருடைய ஆவியைக் குறித்து இறைவனுடைய சத்தம் அவருக்குச் சொல்லிக்கொண்டிருந்தது. இறைவனுடைய ஆவியானவர் இவ்வுலகத்தையும் உங்கள் இருதயத்தையும் ஆராய்ந்து நீங்கள் மற்றவர்களிடமிருந்து மறைப்பதை வெளிப்படுத்துகிறார். கிறிஸ்துவில் இருக்கும் ஆவியானவர் உங்களைச் சரியாக நியாயந் தீர்க்கிறார். நீங்கள் உங்கள் பாவங்களை இறைவனுக்கு முன்பாக அறிக்கை செய்து, சிலுவையில் அறையப்பட்டவரிடமிருந்து பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொண்டிருந்தீர்களானால் நீங்கள் பாக்கியவான்கள். உங்கள் பெயர் ஜீவ புத்தகத்தில் இடம்பெறும். அதன்பிறகு அவர் நீதிமான்களைப் பார்த்து, பிதாவினால் ஆசீர் வதிக்கப்பட்டவர்களே வாருங்கள், உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்ட இராஜ்யத்தில் பிரவேசியுங்கள் என்பார்.

மனிதனுடைய இருதயத்தில் என்ன இருக்கிறது என்று தெரிந்திருப்பதால் சத்தியமாகிய கிறிஸ்து பொய் சொல்ல மாட்டார். நாம் நம்முடைய முற்பிதாக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட குணாதிசயங்களை அவர் அறிவார், நம்மை அவசர மாக நியாயம் தீர்க்கமாட்டார். அவர் பாவியின் மனந்திரும் புதலுக்காக காத்திருக்கிறார். அவருடைய பரிசுத்த தன்மை அவருடைய இரக்கத்தினால் இரக்கமுள்ளவர்களாக மாறியவர் களை அவருடைய ஆவியைப் புறக்கணித்த கடின இருதயமுள்ளவர்களிடமிருந்து பிரிப்பார்.

கிறிஸ்து தன்னுடைய தாழ்மையுடன் சாந்தத்தையும் காண் பிக்கிறார். ஒவ்வொரு காரியத்திலும் தன்னுடைய பிதாவுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார். ஆகவே சிலுவையில் கூட கிறிஸ்து தன்னுடைய வார்த்தையிலும் செய லிலும் பிதாவின் சித்தத்தையே நிறைவேற்றினார். முக்கியமான கட்டத்தில் என்னுடைய சித்தப்படியல்ல உம்முடைய சித்தப் படியே நடக்கட்டும் என்று விண்ணப்பித்தார். இவ்விதமாகவே அவர் இறைவனுடைய நியாயத்தீர்ப்பை முழுவதுமாக நிறைவேற்றுவார்.

பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலுள்ள இந்த அனைத்து உறவுகளையும் விவரமாக நற்செய்தியாளன் பதிவுசெய்வதன் நோக்கம் திரித்துவத்தின் ஒற்றுமையைக் குறித்த நம்முடைய விசுவாசத்தில் நம்மை உறுதிப்படுத்தவே. மரித்தவர்களை உயிர்ப் பிக்கும் அதிகாரம் பிதாவுக்கும் குமாரனுக்கும் சமனாக இருக்கிறது. இறைவன் தன்னுடைய செயல்கள் எல்லாவற்றையும் தன்னுடைய குமாரனுக்குக் காண்பிக்கிறார், அவருக்கு வெளிப்படுத்தாமல் எதையும் செய்வதில்லை. கிறிஸ்து மர ணத்திற்கும் நரகத்திற்கும் உரிய திறவுகோலையுடையவரா யிருக்கிறபடியால் அவருடைய சத்தம் மரித்தோரை எழுப்பும். வெறும் அறிவுசார்ந்தவர்களுக்கு நம்முடைய விசுவாசம் இர கசியமானது; கிறிஸ்துவின் அன்பு அவருடைய சாந்தத்தோடு நம்முடைய இருதயத்தில் ஊற்றப்பட்டால் ஒழிய நம்முடைய இரட்சிப்புக்காக இறைவன் மூன்று பேரில் ஒருவராயிருப்பதன் காரணத்தை நாம் புரிந்துகொள்ள முடியாது.

கேள்வி:

  1. இயேசுவினால் நமக்கு விளக்கப்பட்டபடி பிதாவுக்கும் குமாரனுக்குமுள்ள உறவு என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on July 31, 2012, at 11:06 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)