Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 034 (Healing of the paralytic)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
அ - இரண்டாம் எருசலேம் பயணம் (யோவான் 5:1-47) -- கருப்பொருள்: இயேசுவுக்கும் யூதர்களுக்குமிடையில் பகைமை ஏற்படுதல்

1. பெதஸ்தாவில் திமிர்வாதக்காரனைக் குணமாக்குதல் (யோவான் 5:1-16)


யோவான் 5:10-13
10 ஆதலால் யூதர்கள் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள். 11 அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைச் சொஸ்தமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார் என்றான். 12 அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று உன்னுடனே சொன்ன மனுஷன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள். 13 சொஸ்தமாக்கப்பட்டவன் அவர் இன்னாரென்று அறியவில்லை; அவ்விடத்தில் ஜனங்கள் கூட்டமாயிருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார்.

அடிப்படைவாதிகளும் நியாயப்பிரமாணவாதிகளுமான சிலரைத் தவிர பெதஸ்தா மண்டபத்திலிருந்த அனைவரும் மகிழ்வுற்றனர். இந்த மத வெறியர்களின் பொறாமை பயித்தியக்காரத்தனமானது. அதிலும் இயேசு ஓய்வுநாட்களில் சுகமாக்கும்போது அதிக பொறாமை கொண்டார்கள். இயேசு அந்த மனிதனைச் சுகப்படுத்தியதோடு மட்டுமன்றி, அவர் தன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு தெருவில் நடந்துபோகவும் கட்டளை யிட்டிருந்தார். ஓய்வுநாளில் அனைத்து வேலைகளும் தடை செய்யப்பட்டிருந்த காரணத்தினால் இதுவும் அவர்களுக்குப் பாவமாகத் தெரிந்தது. இந்த சட்டத்தை மீறுபவர்கள் யாரும் கொல்லப்பட வேண்டும் (எண். 15:32 - 36). தங்களது இனம் முழுவதும் ஓய்வுநாளை நுட்பமாகக் கைக்கொண்டால் ஒழிய மேசியா வரமாட்டார் என்று யூதர்கள் நினைத்தார்கள்.

தன் படுக்கையைச் சுமந்துகொண்டு செல்லும் ஒரு மனிதனை யூதர்கள் உடனடியாகக் கல்லெறிய மாட்டார்கள். முதலில் ஒரு எச்சரிப்பைக் கொடுப்பார்கள். இங்கே யூதர்கள் அவருடைய செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததும் இவ்விதமான ஒரு எச்சரிப்பே. ஆனால் சுகமான மனிதன் தன்னுடைய முழு மையான சுகத்திற்கு ஒரு நிபந்தனையாக நான் என் படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்க வேண்டும் என்று இயேசு கட்டளை யிட்டதாக தன்னுடைய செயலை நியாயப்படுத்தினார்.

நியாயப்பிரமாணவாதிகள் கோபப்பட்டார்கள். அந்த மனிதன் சுகமடைந்தது அவர்களுக்கு மகிழ்ச்சி தரவில்லை. அந்த சுகமாக்குதலில் இருந்த இயேசுவின் அன்பின் அதிகாரத்தையும் அவர்களால் உணர முடியவில்லை. சுகவீனமாயிருந்த மனிதனை ஓய்வுநாளில் படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்கச்சொன்ன இயேசுவின் மீது பொறாமையும் வெறுப்பும் கொண்டவர்களாக அதைப் பற்றி விவாதித்தார்கள். ஆகவே, அவர்களுடைய கருத் துப்படி இயேசுவே கொலைசெய்யப்பட பாத்திரமான குற்றவாளி.

இயேசு ஒரு அந்நியராயிருந்தபடியால் தன்னைச் சுகப்படுத்தியது யார் என்று சுகமானவருக்குத் தெரியவில்லை. இதுதான் பெத்சாயிதாவுக்கு இயேசு செல்லும் முதல்முறை. சுகமாக்கிய தற்குப் பிறகு அவர் காணமல்போனார். சுகமானருடைய விசுவாசம் அற்புதங்களில் அல்ல, அன்பின் நபராகிய தன்னில் காணப்பட வேண்டும் என்று இயேசு விரும்பினார்.

யோவான் 5:14-16
14 அதற்குப் பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ் செய்யாதே என்றார். 15 அந்த மனுஷன் போய், தன்னைச் சொஸ்தமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான். 16 இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பப்படுத்தி, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்.

இயேசு தான் சுகமாக்கிய மனிதனைத் தேடி, தேவாலயத்தில் அவர் இறைவனைப் புகழ்ந்துகொண்டிருக்கும்போது கண்டு பிடித்தார். அவர் இயேசுவைப் பார்த்தபோது ஒரே வேளையில் பயமும் மகிழ்ச்சியும் உடையவராக காணப்பட்டார். அவருக்கு இயேசு என்ன சொன்னார் என்று நமக்குத் தெரியும்: நீ சுகமாக்கப்பட்டிருக்கிறாய். 38 வருடங்களாக சுகவீனமாயிருந்த உன்னைச் சுகப்படுத்திய அற்புதத்தின் அளவை உணர்ந்துகொள். இது மனிதனுடைய செயல் அல்ல, இறைவனுடைய செயல். மனுவுருவான இறைவனே உன்னுடைய இருதயக் கண்களைத் திறந்திருக்கிறார்.

உன்னுடைய பாவங்கள் உனக்குத் தெரியும். இறைவனற்ற வாழ்க்கையே உனக்கு இந்தப் பேரிடரைக் கொடுத்தது. என்னுடைய சுகமாக்குதலினால் உன்னையும் உன்னுடைய பாவங் களையும் மன்னித்து விட்டேன். அவருடைய உள்ளான மனிதனில் சுகம் கிடைக்க பாவம் செய்யாமல் தனக்குக் கீழப்படிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இனிமேல் அந்தப் பாவத்திற்குத் திரும்ப மாட்டேன் என்ற தீர்மானம் மன்னிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியம். கிறிஸ்துவின் வார்த்தையை ஏற்றுக்கொண்டு, வேதனையோடு மனந்திரும்பி, தெய்வீக வல்லமையைப் பெற்றுக்கொள்ளும் எந்த நபரும் இறை வனுடைய உதவியினால் தீமையை மேற்கொள்ள முடியும். நம்மால் இயலாத காரியத்தைக் கிறிஸ்து நம்மிடத்தில் கேட்ப தில்லை. அவர் தம்முடைய பரிசுத்த ஆவியானவரைத் தருகிறார், அவருடைய வல்லமையின் மூலம் நாம் நம்முடைய சரீர சோதனைகளையும் நமக்கு விருப்பமான பாவங்களையும் மேற் கொள்ள முடியும். சத்திய ஆவியானவர் தீமையைத் தவிர்க்கவும் எதிர்த்து நிற்கவும் நம்மை பெலப்படுத்துகிறார்.

சில வேளைகளில் இறைவன் நம்மை அவரிடம் திரும்பக் கொண்டு வருவதற்கு நோய்களையும் காயங்களையும் அன்போடு அனுப்புவதுண்டு. வேறு சமயங்களில் இறைவனிடமாக நாம் கடினப்படும்போது செல்வமும் சுகபோகமும் இறைவனுடைய தண்டனையாக நமக்கு வரும். அப்போது ஒரு மனிதன் பிசாசின் குணாதிசயங்களை உடையவனாக மாறி நித்திய அழிவைப் பெறுவான். பாவத்தோடு விளையாடாமல், உங்களுடைய குறிப் பான அடிமைத் தனத்தை அவரிடம் ஒப்புக்கொண்டு உங்களை விடுவிக்கும்படி கேளுங்கள். இயேசுவுக்கும் உங்களுடைய பாவத்திற்கும் இடையில் நீங்கள் ஒரு நடுநிலை எடுக்காதீர்கள். பாவத்தின் மீதான உங்கள் நாட்டத்தை உடைத்துப் போடுங்கள். உங்களுடைய இரட்சகரிடம் ஒரு உடன்படிக்கையில் வாக்களி யுங்கள், அவர் உங்களை இறுதிவரை காப்பார்.

என்ன ஆச்சரியம்! இயேசுவின் ஆலோசனையைக் கேட்ட பிறகு சுகமடைந்த மனிதன் யூதர்களிடம் ஓடிச்சென்று நசரேயனாகிய இயேசுவே தன்னைச் சுகப்படுத்தினார் என்றும் அவரே நியாயப்பிரமாணத்தை விட்டு விலகச் செய்தார் என்று அவர்களிடம் கூறினார். அந்த மனிதன் இயேசுவை கைது செய்வதற்கு உதவக்கூடிய ஒரு உளவாளியாகச் செயல்படுவான் என்று யூதர்கள் நம்பியிருக்கலாம்.

இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்த பிறகு ஆசாரியர்கள் காண் பித்த வெறுப்பைவிட, இயேசு இந்த மனிதனைச் சுகமாக்கிய பிறகு பரிசேயர்கள் காண்பித்த பகைமை அதிக கொடூரமானதாக இருந்தது. இயேசு அவர்களுடைய நீதி குறைவானது என்பதைக் காண்பித்தார். சுயநல நோக்கத்திற்காக நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுதல் நீதியாகாது என்று கூறினார். இறைவன் இரக்கத்தையும் அன்பையுமே எதிர்பார்க்கிறார். அன்பற்ற பரிசுத்தம் பொய்யானது. இறைவன் சடங்குகளை அல்ல இரக்கத் தையே நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார். ஆயிரக் கணக்கான சட் டங்களிலிருந்து நம்மை விடுவித்து, அன்பென்னும் ஒரே கட்டளையைக் கொடுத்திருக்கிற இறைவனுக்கு நன்றி.

கேள்வி:

  1. யூதர்கள் ஏன் இயேசுவைத் துன்பப்படுத்தினார்கள்?

www.Waters-of-Life.net

Page last modified on July 31, 2012, at 10:56 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)