Previous Lesson -- Next Lesson
5. அரசு அதிகாரியின் மகனைக் குணமாக்குதல் (யோவான் 4:43-54)
யோவான் 4:43-46அ
43 இரண்டுநாளைக்குப்பின்பு அவர் அவ்விடம்விட்டுப் புறப்பட்டு கலிலேயாவுக்குப் போனார். 44 ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே கனமில்லையென்று இயேசு தாமே சொல்லியிருந்தார். 45 அவர் கலிலேயாவில் வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த கலிலேயர் அவரை ஏற்றுக்கொண்டார்கள்; அவர்களும் பண்டிகைக்குப் போயிருந்தார்கள். 46 பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்;
நித்திய வாழ்வின் வல்லமையோடு இயேசுவும் அவருடைய சீடர்களும் சமாரியாவில் பிரசங்கித்தார்கள். அவர்கள் மகிழ்வோடு அந்த நற்செய்திப் பணியைச் செய்தார்கள். அனைத்து இனங்களையும் சந்திக்கும் காலம் இன்னும் வரவில்லை. தன்னுடைய சொந்த நாட்டிலுள்ள தீய ஆவிகளை அவர் முதலாவது தோற்கடிக்க வேண்டியிருந்தது. நசரேயர் களுடைய கேலிப் பேச்சு, அவர்களுடைய வன்முறையின் அச்சுறுத்தல் ஆகியவை இருந்தும் அவர் நேரடியாகக் கலிலேயாவுக்குப் போனார். அவர் ஒரு தாழ்மையான குடும் பத்திலிருந்து வந்த காரணத்தினால் அவருடைய நண்பர்களும் உறவினர்களும் அவருடைய தெய்வீகத்தை விசுவாசிக்கவில்லை. அவர்கள் செல்வத்தையும் புகழையும் உயர்வாகக் கருதி, இயேசுவின் ஏழ்மையைப் பழித்தார்கள். அவர்களுடைய அவிசு வாசத்தினால் அவர் அங்கு ஒரு அற்புதமும் செய்ய முடியவில்லை.
பிணியாளிகளைச் சுகமாக்கும் கிறிஸ்துவின் புகழ் வெகுதூரம் பரவியிருந்தது. எருசலேமில் அவர் செய்த அற்புதங்கள் அவருக்கு முன்பாகவே கலிலேயாவுக்குப் போய்விட்டது. பஸ்கா பண்டி கையின் போது எருசலேமிற்கு வந்திருந்த பல கலிலேயர்கள், இயேசு அங்கு செய்த அற்புதங்களையும் அவருடைய அதிகாரத் துடன் கூடிய பிரசங்கத்தையும் கண்டிருந்தார்கள். அவர் கலி லேயா கிராமங்களை அடைந்தபோது அவர்கள் மகிழ்வ டைந்தார்கள். அவரிடமிருந்து சில நன்மைகளைப் பெறும்படி அங்கும் அவர் அற்புதங்களைச் செய்வார் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். இயேசு கானாவூரில் கல்யாணம் நடந்த வீட்டுக்கு திரும்பினார். கானாவூரில் அவர் முதலாவது செய்த அற்புதத்தைப் பார்த்து, அவரை நோக்கிப் பார்க்க ஆரம் பித்தவர்கள் நடுவில் தன்னுடைய சேவையை முழுமைப்படுத்த அவர் விரும்பினார்.
யோவான் 4:46ஆ-54
அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன் வியாதியாயிருந்தான். 47 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப்போய், தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும்படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான். 48 அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார். 49 அதற்கு ராஜாவின் மனுஷன்: ஆண்டவரே, என் பிள்ளை சாகிறதற்குமுன்னே வரவேண்டும் என்றான். 50 இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான். 51 அவன் போகையில், அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டு வந்து, உம்முடைய குமாரன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள். 52 அப்பொழுது: எந்த மணிநேரத்தில் அவனுக்குக் குணமுண்டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தான். அவர்கள்: நேற்று ஏழாமணிநேரத்தில் ஜுரம் அவனை விட்டது என்றார்கள். 53 உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்ன மணிநேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள். 54 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குத் திரும்பிவந்த பின்பு, இது அவர் செய்த இரண்டாம் அற்புதம்.
இராஜாவினுடைய அரண்மனையில் உள்ள ஒரு முக்கியமான அதிகாரி இயேசுவையும் அவருடைய அதிகாரத்தையும் கேள்விப் பட்டு அவரிடத்தில் வந்தார். அந்த கிராமத்து மக்கள் அவரு டைய வருகையைக் கேள்விப்பட்டு, நோயாளிகளைக் குண மாக்கும் இந்த இயேசுவை இராஜாவுக்கு அறிமுகப்படுத்தவே இந்த அதிகாரி அவரிடத்தில் செல்லுகிறார் என்று பேசிக் கொண்டார்கள்.
கப்பர்நகூமின் ஏரிக்கரையோரத்தில் அந்த அதிகாரிக்கு ஒரு சுகவீனமான மகன் இருந்தான். அவனுக்காக தகப்பன் பல்வேறு மருத்துவர்களைக் கொண்டு, அதிக பணத்தைச் செலவு செய்து அவனைக் குணப்படுத்த முயற்சித்தும் முடியவில்லை. இறுதியில் அவன் இயேசுவிடம் வந்தான். அவர் அவனுக்கு உதவுவாரா இல்லையா? இயேசு கானாவிலிருந்து கப்பர்நகூமுக்கு வர வேண்டும் என்று அந்த அதிகாரி விரும்பினார். அவருடைய பிரசன்னத்தினாலேயே தன் மகன் பிழைத்துக்கொள்வான் என்று விசுவாசித்தார்.
இயேசு பெருமையின்றி இந்த உயரதிகாரிக்கு வாழ்த்துச் சொன்னார். ஆனாலும் அவருடைய விசுவாசமின்மையைக் கண்டு வருத்தப்பட்டார். ஒருவன் ஒப்பற்ற நபராகிய இயேசுவை விசுவாசிக்காவிட்டால் அவரால் எதுவும் செய்ய முடியாது. பலர் அவரை விசுவாசித்து அவரிடம் விண்ணப்பிக்கும்போதும், வெறும் உலக உதவியை நாடி அவிசுவாசம் கொள்கிறார்கள். கர்த்தரை உண்மையாக விசுவாசிக்கும் ஒருவர், அவருடைய வார்த்தையை நிபந்தனையின்றி அவர், உதவி வருவதற்கு முன்பாவே அவரை நம்புவார்.
இயேசுவின் கண்டிப்பினால் அவர் சோர்ந்து போகாமல், தன்னைத் தாழ்த்தி இயேசுவை ஐயா அல்லது ஆண்டவரே என்று அழைக்கிறார். கிரேக்க மொழியின் படி அவரை கிறிஸ்துவின் பணியாளர் என்று அவர் கருதுகிறார். அவர் தன்னுடைய மகன் மீது வைத்த அன்பினாலும் இயேசுவின் மீதுள்ள மதிப்பினாலும், அவனுடைய உயிரைக் காப்பதற்காக கப்பர்நகூமுக்கு வரும்படி மறுபடியும் வேண்டிக் கொண்டார்.
இதைப் பார்த்து, இயேசு தன்னுடைய கர்த்தத்துவத்தை விசுவாசிக்க அந்த அதிகாரி விருப்பமுள்ளவராயிருப்பதை அறிந்து, நீ போகலாம் உன் மகன் பிழைத்திருக்கிறான் என்று கூறினார். இயேசு அந்த அதிகாரியோடு கப்பர்நகூமுக்குப் போகாமல், தகப்பனுடைய அன்பைச் சோதித்ததோடு, அவருடைய விசுவாசத்தை உறுதிப்படுத்தினார். இயேசுவுக்கும் சுகவீனமான அவருடைய மகனுக்கும் இடையில் வெகுதூரம் இருக்கும்போதும் அவரால் அவனைக் குணப்படுத்த முடியும் என்று அந்த அதிகாரி விசுவாசித்தாரா?
இயேசு கிறிஸ்துவுடனான தன்னுடைய உரையாடலில் அந்த அதிகாரி இயேசுவின் குணாதிசயத்தையும் அன்பையும் அறிந்து கொண்டார். இயேசு பொய் சொல்லவுமில்லை தன்னைப் பரியாசம் பண்ணவுமில்லை என்பதை அவர் நிச்சயப்படுத்திக் கொண்டார். ஆகவே அந்த அதிகாரி தன் மகனுடைய சுகத்தைத் தன் கண்களால் காணாமலே விசுவாசித்தார். இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து கப்பர்நகூமுக்குத் திரும்பிப் போனார். இவ்வாறு அவர் கீழ்ப்படிந்து போனது இயேசுவைக் கனப்படுத்துவதாகவும் சுகத்தை உறுதிப்படுத்துவதாகவும் இருந்தது. இயேசு என்னுடைய மரித்துக் கொண்டிருக்கும் மகனைக் குணப்படுத்துவாரானால் அவர் எல்லாரைக் காட்டிலும் பெரியவர். சுகமாக்குதல் அவருடைய அதிகாரத்தையும் அவர் பரத்திலிருந்து வந்தவர் என்பதையும் நிரூபிக்கிறது. திரும்பிப் போனதே ஒரு ஒழுக்கமாகவும் வளர்ச்சியடையும் விசுவாசமாகவும் இருக்கிறது.
இயேசு அந்த அதிகாரியின் வேலைக்காரர்களையும் அவருடைய மகனின் சுகத்தை அறிவிக்கும்படி அவரிடம் வேகமாக அனுப்பி வைத்தார். அவருடைய கவலை நீங்கி கர்த்தரை மகிமைப் படுத்தினார். காய்ச்சல் அவனை விட்டு நீங்கிய நேரத்தைக் கேட்டபோது, இயேசு அவரிடம் சுகத்தைக் கட்டளையிட்டு வாக்களித்த அதே மதிய வேளை என்பதை அறிந்து கொண்டான்.
இந்த அதிகாரி கிறிஸ்துவின் அன்பைக் குறித்து தன்னுடைய குடும்பத்தாரிடம் நன்றியுடன் சாட்சி பகர்ந்தார்.
இந்த அற்புதம் யோவான் பதிவுசெய்யும் இரண்டாவது அடையாளமாகும். கிறிஸ்துவின் செல்வாக்கு இராஜாவின் அரண் மனையையும் ஊடுருவிச் சென்றது. கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசமே அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் இதை உறுதிப்படுத்தும் இறைவனுக்கேற்ற ஆராதனை என்பதை விசுவாசித்து மக்கள் எதிர்கால நிகழ்ச்சிக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் இவ்வுலகத்திற்கு வந்தமைக்காக உமக்கு நன்றி. நீர் தூரத்திலிருந்தே கப்பர்நகூமிலிருந்த சிறுவனை உம்முடைய சரீரப் பிரசன்னத்தினாலே சுகமாக்கினீர். அவனுடைய தகப்பனை உம்மில் உறுதியான விசுவாசம்கொள்ளும்படி செய்தீர். உம்முடைய அன்பிலும் வல்லமையிலும் நம்பிக்கை கொள்ளும்படி எங்களுக்குப் போதியும். அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்திருக்கும் பலரை நீர் இரட்சிக்க வேண்டும் என்று நாங்கள் விண்ணப்பிக்கிறோம். நீர் எங்களுடைய விண்ணப்பத்திற்கு பதிலளிப்பீர் என்று நாங்கள் நம்புகிறோம்.
கேள்வி:
- அந்த அதிகாரி கடந்து சென்ற விசுவாசத்தின் படிகள் யாவை?